தை மாதத்தின் கடைசி சோமவாரம் இது. இந்த திங்கட்கிழமையில் ருத்ரம் சொல்லுவதும் ஜபிப்பதும் மகா புண்ணியம். சிவனாருக்கு வில்வம் சார்த்தி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி மனதார பிரார்த்தனை செய்துகொள்வது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை கடைசி சோமவாரத்தில் சிவ தரிசனம் செய்வோம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நமசிவாய மந்திரம் சொல்லி, சிவனாரைத் தொழுவோம். சிந்தனையில் தெளிவையும் ஞானத்தையும் தந்தருள்வார் ஈசன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aBNPUg
via IFTTT