மாசி மாதப் பிறப்பும் சனிக்கிழமையும் இணைந்தநாளில், சந்திர தரிசனமும் காண்பது நம் பாவங்களையெல்லாம் போக்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். மாலையில் நவக்கிரக வழிபாடு செய்வதும் நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை தரிசனம் செய்வதும் கிரக தோஷங்கள் அனைத்தையும் போக்கும் என்பதும் ஐதீகம்.
மகத்துவம் நிறைந்த மாசி என்பார்கள். மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்தால் அந்த ஆலயத்தின் சாந்நித்தியம் உலகெங்கிலும் வியாபிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதேபோல், உபநயனம் என்று சொல்லப்படுகிற யக்ஞோபவீத வைபவத்தை மாசி மாதத்தில் செய்வது இன்னும் சிறப்புகளைத் தரும்; அந்த பாலகனுக்கு கல்வியையும் ஞானத்தையும் வழங்கும் என்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pdZFt6
via IFTTT