'நான் பரம்பொருளாக இருக்கிறேன்’ என்று எந்தத் தருணத்திலும் இறைவன் தன்னைப் பெருமையாய் சொல்லிக் கொண்டதே இல்லை.
ஒரு அடியாருக்காக அந்த அடியார் தன்மேல் கொண்டிருக்கும் மாறா பக்திக்காக, அடியாருக்கு முன் தோன்றி லீலைகள் மேற்கொண்டார். அடியவருக்கு நேர்ந்த துன்பம் களைவதற்கு மட்டுமே தோன்றினார்; லீலைகள் மேற்கொண்டார் லீலை செய்கிறாரே தவிர மற்றைய இந்த உலகத்திற்காக அற்புதங்களோ லீலைகளோ நிகழ்த்துவதே இல்லை இறைவன். சாதாரண மனிதர்கள் வழக்கமாக கேட்கும் கேள்வி இதுதான்... ஏன் இப்படி அடியாரை துன்பத்துக்கு ஆட்படுத்த வேண்டும், பின்னர் லீலைகள் புரிந்து திருவிளையாடல் நிகழ்த்தி காட்சி தந்து ஆட்கொள்ளவேண்டும் என்பதுதான் பக்தர்கள்பலரின் கேள்வி.
இடருக்கு ஆட்படுத்த வேண்டும் - அதற்கு பிறகு லீலை புரிந்து தரிசனம் தர வேண்டும் என்பது... இந்த இரண்டையும் புரிந்துகொள்ளவேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pfATJj
via IFTTT