89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை: ஏராளமான இசைக் கலைஞர்கள் அஞ்சலி

திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை: ஏராளமான இசைக் கலைஞர்கள் அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் இன்று காலை (2-ம் தேதி) நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜருக்கு ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா பிப். 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 2 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tsMlVg
via IFTTT