தைப்பூச நன்னாளில்... சஷ்டி கவசம் பாராயணம் செய்தால், நம் சங்கடங்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சகல தோஷங்களும் நீங்கப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். மிகச்சிறந்த முருகனடியார். அவர் எங்கு, யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனாலும் கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ynnwvy
via IFTTT