திருப்போரூர் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் விக்கிரகத் திருமேனி, கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது. வலது காலை மயில் மீது ஊன்றியிருக்கிறார். வில்லேந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சம்ஹார முத்துக்குமார சுவாமியை, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகளில் அல்லது ஆறு சஷ்டி திதிகளில் வந்து வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்வது எண்ணிலடங்காத பலன்களைத் தந்தருளும்.
கந்தசஷ்டி கவசத்தில், ‘சமராபுரிவாழ் சண்முகத்தரசே’ என்றொரு வாசகம் வரும். இந்த வாசகத்துக்கு உரிய திருத்தலம்... திருப்போரூர். சென்னைக்கு அருகேயுள்ள அற்புதமான முருகப்பெருமான் தலங்களில் திருப்போரூர் திருத்தலமும் ஒன்று.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36fMSzC
via IFTTT