சிறுவாபுரி முருகப் பெருமானை தொடர்ந்து வணங்கி வந்தால், விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
சென்னையில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சிறுவாபுரி திருத்தலம். இங்கே உள்ள முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி.
அழகிய ஆலயம். கொடிமரத்துக்கு அருகில் உள்ள மயில், மரகத மயிலாகக் காட்சி தருவது காண்பதற்கு அரிதான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இதேபோல் கோயிலுக்குள் நுழைந்ததும் ராஜகணபதியும் கம்பீரம் கூட்டி காட்சி தருகிறார். பிள்ளையாரும் மரகதக் கல்லில் அற்புதமாகக் காட்சி தருகிறார்.
இந்தத் தலத்தின் நவக்கிரகம் வித்தியாசமானது. நவக்கிரத்தில் உள்ள கிரகங்கள் அனைத்துமே தங்களின் வாகனத்துடன் தரிசனம் தருவது மற்றுமொரு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YlkDeM
via IFTTT