அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி இருக்கும். அந்த நவக்கிரகத்தில் ஒரு கிரகமாக சனீஸ்வரரும் காட்சி தருவார். மற்றபடி தனிச்சந்நிதியாக சனி பகவான் அருள்பாலிக்கும் ஆலயங்கள் மிகக் குறைவுதான்.
திருவாரூர் அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்தில் அக்னீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கே பொங்கு சனீஸ்வரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான். திருநள்ளாறிலும் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவான் இருக்கிறார். இன்னும் ஒரு சில தலங்களில் சனீஸ்வர பகவான், தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Rrhig
via IFTTT