ஞானகுருவாக முருகப்பெருமான்; உலகுக்கே தந்தையான சிவனார்; குரு வியாழ பகவான், சனீஸ்வரர் என அமைந்திருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கு வந்தாலே, தரிசித்தாலே மகா புண்ணியம். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். சனீஸ்வரரின் அருளைப் பெறலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
குரு வியாழ பகவானுக்கு உரிய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து, செந்திலாண்டவரைத் தரிசித்தால், குருவருள் கிடைக்கப் பெறலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந்தூர் திருத்தலம். கடலோரத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம். சூரபத்மனை அழிப்பதற்காக, சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார் என்கிறது புராணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sxEXay
via IFTTT