சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு மிகவும் விசேஷமானது. கடன் தொல்லையில் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், சொர்ணாகர்ஷண பைரவரின் ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் தெருநாய்களுக்கு உணவளித்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். இழந்த பொருட்களையும் புகழையும் அடைவீர்கள். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றியைத் தந்தருளுவார் சொர்ணாகர்ஷண பைரவர்.
தோல்வியும் அவமானமும் யாருக்குத்தான் இல்லை. ஆனால் ஒருவரின் வாழ்வில் எப்போதும் தோல்வி மட்டுமே இருப்பதில்லை. ஒருவர், தன் வாழ்நாளில் எப்போதும் அவமானங்களைச் சந்தித்துக் கொண்டே இருப்பதில்லை. ‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்பார்கள். அப்படியொரு தெய்வமாக, வாழ்க்கையை மாற்றித் தரும் வள்ளலாக, பேரருள் புரியும் இறை சக்தியாகத் திகழ்கிறார் காலபைரவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2L8JZth
via IFTTT