பஞ்ச பூத தலங்களுள் நிலத்துக்கு உரிய திருத்தலம் திருவாரூர். ‘நினைத்தாலே முக்தி திருவண்ணாமலை’ என்பார்கள். அதேபோல், திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்றொரு வாசகம் உண்டு. மிகப்பிரமாண்டமாகத் திகழும் ஆலயங்களில், திருவாரூர் திருத்தலமும் ஒன்று.
புராணங்களுடனும் புராதனப் பெருமைகளுடனும் திகழ்கிறது திருவாரூர். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீதியாகராஜ சுவாமி. விடங்கம் என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று அர்த்தம். விடங்கத் தலங்கள் ஏழு என்பார்கள். அதை சப்த விடங்க தலங்கள் என்று போற்றுவார்கள். சப்த விடங்கத் தலங்களில் திருவாரூரும் ஒன்று.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35covCu
via IFTTT