முருகப்பெருமானை பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாராயணம் செய்து வேண்டுவோம். தை பெளர்ணமியிலும் தைப்பூசத்திலும் தை வெள்ளிக்கிழமையிலும் அவசியம் பாராயணம் செய்து முருகக் கடவுளை பூஜித்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
தை பெளர்ணமி என்பது விசேஷமான நாள். தைப்பூசம் என்பது முருக வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். தை பெளர்ணமியும் தைப்பூசமும் இணைந்து வந்துள்ள இந்த நாளில், முருகக் கடவுளை வணங்குவதும் குடும்பத்தினர் மொத்தமாக இருந்து முருகக் கடவுளிடம் பிரார்த்தனைகள் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளக்கூடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YlPYxJ
via IFTTT