வேலுண்டு வினையில்லை என்பார்கள். யாமிருக்க பயமேன் என்று அருளியுள்ளார் முருகப்பெருமான். தை பெளர்ணமியும் தைப்பூசமும் இணைந்த நன்னாளில்... வேலவனைத் தொழுவோம். வேண்டியதைத் தந்திடுவேன் வெற்றிக்குமரன்.
தைப்பூசம் என்றதும் பழநியும் பாதயாத்திரையும்தான் ஞாபகத்துக்கு வரும்! குறிப்பாக, செட்டிநாட்டுப் பகுதி பக்தர்கள் நினைவுக்கு வருவார்கள்! பாதயாத்திரையாக பழநிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்த பூமி... செட்டிநாடு! நகரத்தார், பிள்ளையார் சுழி போடுவார்கள். சிவமயம் என்று எழுதுவார்கள். ஆனாலும் முருகக் கடவுள் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்கள்! தங்கள் வாரிசுகளுக்கு அழகப்பன், பழநியப்பன், வேலப்பன், முருகப்பன், முருகம்மை, தெய்வானை, அழகம்மை, வள்ளியம்மாள் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்!
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39s7vee
via IFTTT