89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஒரு தர்மம் செய்தால் கோடி தர்மம் செய்த பலன் நிச்சயம் ;  நினைத்தாலே, தரிசித்தாலே, பிறந்தாலே முக்தி தரும் திருவெண்காடு! 

ஒரு தர்மம் செய்தால் கோடி தர்மம் செய்த பலன் நிச்சயம் ;  நினைத்தாலே, தரிசித்தாலே, பிறந்தாலே முக்தி தரும் திருவெண்காடு! 

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் என்று திருவண்ணாமலையைச் சொல்லுவார்கள். பிறக்க முக்தி நிச்சயம் என்று திருவாரூரைச் சொல்லுவார்கள். அதாவது திருவாரூரில் பிறந்தாலே முக்தி நிச்சயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காசியில் இறந்தால் முக்தி நிச்சயம் என்பார்கள். தில்லை என்று சொல்லப்படும் சிதம்பரத்தில் தரிசித்தால் முக்தி என்பார்கள். இவை அனைத்தும் கொடுக்கின்ற தலமாக, கிடைக்கின்ற தலமாக போற்றப்படுகிறது, திருவெண்காடு க்ஷேத்திரம்.

சீர்காழிக்கு அருகில் உள்ளது திருவெண்காடு திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. மிகப் பிரமாண்டமான திருத்தலம். புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38Wajjj
via IFTTT