தைப்பூச திருநாளில், பழநிக்கு பாதயாத்திரை எனும் விஷயத்தை செட்டிநாட்டு மக்கள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லுவார்கள். சுமார் 180 வருடங்களுக்கு முன்பு, காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பழநி பாதயாத்திரையை இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இறைவனை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். ஆனாலும் குறிப்பிட்ட நாட்களைச் சொல்லி வைத்திருக்கின்றன சாஸ்திரங்களும் புராணங்களும்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வணங்குவதற்கும் இப்படி ஏராளமான முக்கியமான நாட்கள் இருக்கின்றன. எல்லா நாளிலும் முருகக் கடவுளை வணங்கலாம். இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் வணங்குவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cdTYZA
via IFTTT