89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பணப் பிரச்சினை தீரும்; வியாபாரத்தில் லாபம்; உத்தியோகத்தில் உயர்வு; 25ம் தேதி வாஸ்து நாள்; வாஸ்து பகவானை வணங்குவோம்!

பணப் பிரச்சினை தீரும்; வியாபாரத்தில் லாபம்; உத்தியோகத்தில் உயர்வு; 25ம் தேதி வாஸ்து நாள்; வாஸ்து பகவானை வணங்குவோம்!

வாஸ்து நாளில், வாஸ்து நேரத்தில், இல்லத்தில், பூஜையறையில் விளக்கேற்றி, தீப தூப ஆராதனைகள் செய்து வழிபட்டால், சகல நன்மைகளும் தந்தருளுவார். இதுவரை இருந்த வியாபாரம் முதலான தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியையும் தம்பதி இடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தித் தருவார். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார் வாஸ்து பகவான்!

வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருக்கும் மாதங்களைக் குறிப்பிடுகிறது மனையடி சாஸ்திரம். வருடத்தில் நான்கு மாதங்கள் வாஸ்து பகவான் உறக்கத்திலேயே இருப்பார். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத்தில் இருப்பார் என்றும் அவர் விழித்திருக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய எட்டு மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் விழித்திருப்பார் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பின் மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே, உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a1IlSr
via IFTTT