89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தில்லை... சிதம்பரம்... ஆனந்தக் கூத்தனின் பெருமைகள்! 

தில்லை... சிதம்பரம்... ஆனந்தக் கூத்தனின் பெருமைகள்! 

பெருமைகள் பல கொண்ட சிதம்பரம் பிரமாண்டமான திருத்தலம். உலகில் உள்ள எல்லா ஆலயங்களின் இறைவனும் தில்லை அம்பல நடராஜனின் திருநடனத்தை தரிசிக்க சிதம்பரத்துக்கு வருகிறார்கள் என்கிற புராண - புராதனப் பெருமைகள் கொண்ட புண்ணிய க்ஷேத்திரம் என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம்... சிதம்பரம் திருத்தலம் நினைக்க நினைக்க வியப்பூட்டக்கூடியவையாகவும் பிரமிப்பை விஸ்தரித்தபடியேயும் இருக்கிறது. திருச்சிற்றம்பலத்தின் தங்க விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டிருக்கின்றன. நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து சுமார் 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது.
திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. பக்தர்கள், இங்கிருந்துதான் நடராஜப் பெருமானை வணங்குகின்றனர். கனகசபையில் ஒன்பது வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்களைக் குறிக்கும். கனக சபை பிரம்மபீடப் பகுதி. கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களைக் குறிக்கின்றன என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WWSKss
via IFTTT