89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிரம்ம முகூர்த்தத்தில் முன்னோரை நினைத்தால் மும்மடங்கு பலன்! 

பிரம்ம முகூர்த்தத்தில் முன்னோரை நினைத்தால் மும்மடங்கு பலன்! 

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பதும் பூஜையில் ஈடுபடுவதும் விசேஷமானது. ஒரு பத்துநிமிடமேனும் பூஜையறையில் அமர்ந்து கண் மூடி நாம் செய்கிற பிரார்த்தனை அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.குறிப்பாக, பிரம்ம முகூர்த்தத்தில் நம் முன்னோர்களை நினைத்து கண்கள் மூடி வேண்டிக்கொண்டால் போதும்... மும்மடங்கு பலன்களைத் தந்தருள்வார்கள் முன்னோர்கள்.

இறைவனை வழிபடுவதற்கு நேரமோ காலமோ இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். எந்தத் தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். அதேசமயம், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட திதியில், குறிப்பிட்ட ஓரையில் வழிபடச் சொல்லியிருக்கிறது தர்ம சாஸ்திரம்.
நாள், நட்சத்திரம், திதி, ஓரை என்பதெல்லாம் கடந்து பிரம்ம முகூர்த்தத்தில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் செய்யும் எந்த வழிபாடாக இருந்தாலும் மும்மடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள். அதேபோல், பிரம்ம முகூர்த்த வேளையில், நாம் செய்யும் மந்திர ஜபங்கள் இன்னும் வீரியமும் வலிமையும் மிக்கவையாக இருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KDfony
via IFTTT