89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; கம்பராமாயண  ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; கம்பராமாயண  ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசிக்கு பேர்பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவத் தலங்களில் முதன்மையான திருத்தலம் என்று போற்றப்படுகிறது இந்தத் திருத்தலம்.
பிரம்மா, மகாவிஷ்ணுவை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். அப்படி தவமிருந்து பாற்கடலில் இருந்து பெறப்பட்டது ஸ்ரீரங்க விமானம். நான்கு வேதங்களையும் இந்த விமானத்தின் முன்னே ஓதியருளினார். ஸ்ரீரங்க விமானத்தில், அர்ச்சாரூபமாக, முழு வடிவமாக அவதரித்த ரங்கநாதரை, இக்ஷ்வாகு மன்னர் தங்களின் குலதெய்வமாகவே அயோத்தியில் வைத்து பூஜித்து வந்தார். அந்த இக்ஷ்வாகு வம்சத்தின் வழியே வந்தவர்தான் ராமபிரான்.

சீதையை மீட்டெடுக்க உதவிபுரிந்த விபீஷணனுக்கு ரங்கநாதரின் விக்கிரகத்தை பரிசாக வழங்கினார் ராமபிரான். விபீஷணன், அதை அயோத்தியில் இருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், தர்மவர்மா எனும் சோழ தேசத்து அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க, ரங்க மூர்த்தத்தை காவிரிக்கரையில் தன் தேசமான இலங்கையை நோக்கிய முகமாக பிரதிஷ்டை செய்து சென்றார் என ஸ்ரீரங்க மகாத்மியம் விவரிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WFff5o
via IFTTT