89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’என்னிடம் வைக்கும் பிரார்த்தனைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்!’ - அருள்மழை பொழியும் ஷீர்டி சாயிபாபா 

’என்னிடம் வைக்கும் பிரார்த்தனைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்!’ - அருள்மழை பொழியும் ஷீர்டி சாயிபாபா 

‘என்னிடம் நீங்கள் வைக்கும் பிரார்த்தனைகள் எதுவானாலும் அவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
பகவான் ஷீர்டி சாயிபாபா, மகத்துவம் நிறைந்த மகான் மட்டுமில்லை. இந்தக் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமும் கூட. லட்சக்கணக்கான பக்தர்கள், பாபாவை, இறையின் தூதனாகவும் மகானாகவும் கடவுளாகவுமே பார்க்கிறார்கள்.

பாபாவின் பேச்சு குறைவுதான். ஆனால் அவரின் செயல்களே பேச்சுகளாகவும் அருளாகவும் பக்தர்களை அரவணைப்பதாகவும் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன.
பாபாவிடம் நாம் நம்முடைய கோரிக்கைகளை முன் வைப்பதற்கு முன்னதாக ஒன்றை புரிந்து உணர்ந்துகொள்ளவேண்டும். ’எந்த விஷயத்திலும், எந்த சமயத்திலும், எந்தச் சூழலில் நாம் தன்னந்தனியாக இருக்கிறோம், நமக்கென்று எவருமே இல்லையே என்று சுயகழிவிரக்கம் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் துணையாக நானிருக்கிறேன் என்பதை முழுமையாக நம்புங்கள்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2K7l0Go
via IFTTT