கார்த்திகை வெள்ளிக்கிழமையில் சுவாமி மலை முருகப் பெருமானை மனதார தரிசித்து வேண்டிக்கொண்டால், செவ்வாய் தோஷம் விலகும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழ்த்தித் தருவான் சுவாமிநாத சுவாமி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு என்று போற்றப்படும் திருத்தலம் சுவாமிமலை. திருவேரகம் என்று இந்தத் தலத்தை போற்றுகிறது புராணம்.
சிவபெருமானே சுவாமி. அந்த சுவாமிக்கே நாதனாகத் திகழ்ந்தார் முருகப் பெருமான். பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய ஒப்பற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்தில் அமைந்திருக்கும் வெற்றிவேலன், தன் தந்தையார் சிவபெருமானுக்கு குருவாகவே இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த திருத்தலம் இது!
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qNmZQk
via IFTTT