89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த திரளான பக்தர்கள் வழிபாடு: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த திரளான பக்தர்கள் வழிபாடு: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிக்கிழமை என்பதால், ஆன்லைன் மூலம் பதிவு செய்த திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய, தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3apzITD
via IFTTT