89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்பு

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்பு

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.27) அதிகாலை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருநள்ளாற்றில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா சிறப்பான வகையில் நடைபெற்றது. இக்கோயிலில் அனுக்கிரகமூர்த்தியாக சனி பகவான் அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கடந்த சனிப்பெயர்ச்சி விழா 2017-ம் ஆண்டு டிச.19 ம் தேதி நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KVsA6Q
via IFTTT