89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நாம் சொல்வதை நம் கோரிக்கையை பிறர் ஏற்றுக்கொள்ள சிறந்த வழி

நாம் சொல்வதை நம் கோரிக்கையை பிறர் ஏற்றுக்கொள்ள சிறந்த வழி

நாம் பேசும் பேச்சை மற்றவர் மறுக்காமல் கேட்க


பொதுவாக சிலர் மற்றவர் சொல்வதைக்கேட்க மாட்டார்கள்.அவர்களை

கேட்க வைக்க மிக சிறந்த வழி இரண்டு உள்ளது .
1. நமது தேவைகளுக்காக மற்றவரை அணுகும் போது எதிரில் உள்ளவரின் வலது கண்ணை பார்த்து பேசணும்.அப்போது உங்கள் இரண்டு கால்களின் பெருவிரல்களை
பூமியில் அழுத்தமாக ஊன்றிக்கொள்ளவும்.கைகள் சின்முத்திரையில் இருக்கணும்.
( சின் முத்திரை என்பது கை விரலில் ஆள்காட்டி விரல் நுனி கட்டை விரல் நுனியை தொட்டிகொண்டிருப்பது).
இந்த முறையை பின்பற்றி மற்றவர்களிடம் பேசிப்பாருங்கள்.உங்கள் தேவைகள் அதிவிரைவில் நிறைவேறுவதை உணரமுடியும்.உங்கள் வார்த்தைகளை அடுத்தவர் மனதில் பதியவைக்கும் முறைதான் இது.உங்கள் கோரிக்கை சில நேரம் நிறைவேறாவிட்டாலும் அதை பற்றி தீவிரமாக யோசிக்க நீங்க குறிப்பிடும் நபர் முயலுவார்.இந்த முறை உடனடியாக நடக்கவில்லை என்றாலும் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யவும்
விடாமல் உங்கள் அணுகுமுறைகளை இந்த யுக்தியை கையாண்டு தொடருங்கள்.வெற்றி உங்கள் பக்கம்தான்.

2. நாம் சொல்வதை மற்றவர் கேட்க சொல்பவர் உயரத்திலும்,கேட்பவர் தாழ்வான இடத்திலும் இருக்கவேண்டும்.மேலே இருந்து ஒருவர் சொல்லும் விஷயத்திற்க்கு
நம் காதுகளுக்கு வந்து சேரும் தகவலின் ஈர்ப்பு விசையானது மிக அதிகமாக இருக்கும்.
மேலிருந்து கீழே வரும் எந்த ஒரு செயல்பாட்டிற்க்கும் வேகமும் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பது ஒரு அறிவியல் பூர்வமான உண்மை.