கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, அக்.3 பூர்வாங்க பூஜைகளுடன் இன்று காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்துக்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பூதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wZI6PQB
via IFTTT