விநாயகர் சதுர்த்தியின் இரவு நாம் சந்திரனை பார்க்கக் கூடாது என்றும், அவ்வாறு பார்த்து விட்டால், நாம் செய்யாத செயலுக்கு பழி ஏற்க நேரிடும் எனவும் நம்பப்படுகிறது! இதை கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதற்கு ஓர் ஆழமான பொருள் இருக்கிறது. சந்திரன் மனதை குறிக்கிறது. சந்திரன் எவ்வாறு தேய்ந்து வளர்கிறதோ, அவ்வாறே மனதும் மேலும் கீழும் செல்கிறது. சில நாட்கள் அது உங்களை சிறப்பாக உணர செய்கிறது, அதுபோல் சில நேரங்களில் மிக சிறிய காரணங்களுக்காக உங்களை அவநம்பிக்கை எனும் குழிக்குள் இழுத்து விட்டு விடுகிறது.
மனம் மட்டுமே உங்களை தொடர்ந்து பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகிறது. விநாயகர் ஞானத்தின் கடவுள், அவர் தான் நமக்கு நம் மனதின் அலைச்சல்களில் இருந்து எவ்வாறு வெளிவருவது, எவ்வாறு ஞானத்தில் நிலைத்து நிற்பது, என கற்று தருகிறார். மேலும் நம் இருப்பின் பேரானந்தத்தில் இருந்து, ஏதன் மூலமும், நாம் தடுமாற்றம் கொண்டு வெளிவராமல் பார்த்து கொள்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AW1xc3r
via IFTTT