89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மன்னேரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னேரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியில், பராந்தக சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மற்றும் புகழ்பெற்ற மன்னேரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 2 நாட்களாக கணபதி பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹுதி மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணியளவில், கலச பூஜை நடைபெற்றது. அப்போது, சிவாச்சாரியார்கள் யாக சாலையிலிருந்து கலசங்களை கொண்டு சென்று மன்னேரி அம்மன் கோயில் விமான கோபுரத்தின் மீது கலசாபிஷேகம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uEIgkQf
via IFTTT