கோவை: கோவை மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து சிறப்பாக செயல்படுவோருக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதன்படி கோவை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்த சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து, சொந்த நூலகங்களுக்கு ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை மாவட்ட ஆட்சியரால் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5jU9Kd1
via IFTTT