மதுரை: மதுரையில் நாளை நடைபெறும் பிட்டு மண் சுமந்த திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து முருகனும் தெய்வானையும் இன்று (வியாழக்கிழமை) காலையில் மதுரைக்குப் புறப்பட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தற்போது ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி ஒன்பதாம் நாள் திருவிழாவான (வெள்ளிக்கிழமை) ஆரப்பாளையம் பிட்டுத்தோப்பு மண்டபத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெறுகிறது. இதில் பாண்டிய மன்னனாக பங்கேற்பதற்காக இன்று காலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து முருகன் தெய்வானையுடன் மதுரைக்குப் புறப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4sxpyMw
via IFTTT