ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தென் திருப்பதி' என அழைக்கபடும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவின் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு 240 படிகளை கொண்ட திருவண்ணாமலையின் மீது நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி சீனிவாச பெருமாள், இந்த மலையிலேயே தங்கியதாகவும், அதனால் இக்கோயில் தென் திருப்பதி என அழைக்கப்பட்டதாகவும் ஐதீகம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9bEcDOd
via IFTTT