89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தொடங்கியது புரட்டாசி மாதம்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

தொடங்கியது புரட்டாசி மாதம்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: புரட்டாசி மாதத்தில், தமிழ்நாட்டி லிருந்து அதிகளவிலான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்கள் கூட்டம்அலைமோத தொடங்கி விட்டது.

பஸ் நிலையம், ரயில் நிலையம், அலிபிரி சோதனை சாவடி என திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்படுகிறது. இதனால் நேற்று ஆதார் அட்டை இல்லாமல் சுவாமிதரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 24 மணி நேரம் வரை காத்திருந்து சர்வ தரிசனம் மூலம் சுவாமியை வழிபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NDE1wWB
via IFTTT