89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 24 ஆண்டு புகை பழக்கத்தை விட்டவருக்கு குவியும் பாராட்டு

24 ஆண்டு புகை பழக்கத்தை விட்டவருக்கு குவியும் பாராட்டு

புதுடெல்லி: 24 ஆண்டுகால புகைப் பழக்கத்தை கைவிட்டதாக எழுதிய பதிவருக்கு சமூக ஊடகத்தில் பாராட்டும் வாழ்த்தும் குவிந்துள்ளது.

ரோஹித் குல்கர்னி எனும் நபர் தனது சமூக ஊடக பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவு: கடந்த 24 ஆண்டுகளாக தினந்தோறும் 10 சிகரெட்டுகள் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதை நினைத்தாலே பீதியாக உள்ளது. இந்த ஆண்டு ஜென்மாஷ்டமி தினத்தன்று இனிபுகை பிடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். கடந்த 17 நாட்களில் ஒருமுறை கூட சிகரெட்டை தொடவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CoV9usS
via IFTTT