89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நத்தம் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

நத்தம் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கோயிலின் வெளிப்பிரகாரம் கருங்கற்களால் கட்டப்பட்டு, அழகுடன் காட்சியளிக்கிறது.

இந்தக் கோயிலில் 22 கல் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. மாசி மாதத்தில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழாவில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோயிலுக்கு வருகின்றனர். 15 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவின் தொடக்கமாக நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் மஞ்சள் காப்பு அணிந்து, கரந்தமலை சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிபடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IR68gJl
via IFTTT