89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) ஆடி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் இளநீர் தேன் உள்ளிட்டபூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30sDzFC
via IFTTT