ஹைதராபாத்: ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளில் அரசுப் பேருந்தில் அண்ணனை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தில் இருந்த பெண் நடத்துநரே அந்தப் பெண்ணுக்கும் சுகப் பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. தெலங்கானா மாநிலத்திலும் இப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டம், வனபர்த்தியில் உள்ள தனது சகோதருக்கு ராக்கி கயிறு கட்ட சந்தியா எனும் நிறைமாத கர்ப்பிணி தெலங்கானா அரசுப் பேருந்தில் ஏறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sEJtP71
via IFTTT