சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் கடற்கரை, கோயில் தெப்பக்குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது.
அதிலும், ஆடி, புரட்டாசி (மகாளயம்), தை மாதங்களில் வரும் அமாவாசை நாள், கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆடி அமாவாசையான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் திரண்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1j4doTa
via IFTTT