89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வெம்பக்கோட்டை அகழாய்வில் சீறும் காளை உருவத்துடன் சூதுபவள மணி கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் சீறும் காளை உருவத்துடன் சூதுபவள மணி கண்டெடுப்பு

சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை உருவம் இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜுன் 18-ம் தேதி 3ம் கட்ட அகழ்வாய்வு பணி தொடங்கப்பட்டது. இதுவரை சங்கு, மாவு கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி, நாயக்கர் கால செம்பு நாணயம், சங்கு வளையல்கள் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கண்ணாடி மணிகள், கல்மணிகள் உள்ளிட்பட 650-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m8YFf3Q
via IFTTT