பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா ஆக.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பக்தி சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளான ஆக.21-ம் தேதி அகோபில வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ( வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xCzg4dN
via IFTTT