சேலம், அம்மாபேட்டை பிரதான சாலையில் 400 ஆண்டுகால பழமையான பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தயிர் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி, தன் கூடையில் மாரியம்மன் சிலையை சுமந்து கொண்டு செல்ல, செல்லும் வழியில், இளைப்பாறுவதற்காக அம்மாப்பேட்டை பகுதியில் அதை கீழே வைக்க, அச்சிலையை அவரால் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அதன்பின் அம்மனை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ய, பக்தர்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வருகிறாள்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி, ஆனி, ஆடித் திருவிழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி நன்னாள் என விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7B1ZyMi
via IFTTT