89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: பிரதோஷ நாளில் மலையேற தொடங்கிய பக்தர்கள்

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: பிரதோஷ நாளில் மலையேற தொடங்கிய பக்தர்கள்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான இன்று (ஆக.1) பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையேற தொடங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சித்தர் மலை என போற்றப்படும் சதுரகிரி உள்ளது. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, ஆனந்த வல்லியம்மன், பிலாவடி கருப்பசாமி, சட்டநாத முனி குகை, 18 சித்தர்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளது. சதுரகிரி மலைக்குச் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய 8 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சதுரகிரியில் ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை, மகா சிவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CKWiT1
via IFTTT