வதோதரா: குஜராத் மாநிலத்தில் கனமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தில் தனது 50 லட்ச ரூபாய் கார் மூழ்கியதாக வதோதராவை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது வேதனையை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
குஜராத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 18,000 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வதோதராவில் மட்டும் சுமார் 12,000 மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XkroN4n
via IFTTT