89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காணாமல் போன சாப்ளின் | கல்லறைத் திருடர்கள் 1

காணாமல் போன சாப்ளின் | கல்லறைத் திருடர்கள் 1

வ்வொரு மனிதனும் கருவறையில் இருந்து வெளியே வரும்போது தொடங்கும் போராட்டம், கல்லறைக்குப் போகும் போதுதான் முடியும் என்பார்கள். ஆனால், சிலருக்குக் கல்லறையிலும் நிம்மதி இருப்பதில்லை.

‘அன்றாட வாழ்க்கையை அன்றாடமும் வாழ முடியாது’ என்று பிரபலங்களைப் பற்றிச் சொல்வார்கள். பிரபலமாக இருப்பதில் பல சங்கடங்கள் உண்டு. உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று இரண்டு முகமூடிகள் வேண்டும். கோபம், மகிழ்ச்சி, எரிச்சல், வெறுப்பு, கசப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சாமானியனுக்கு இருக்கும் சுதந்திரம், பிரபலங்களுக்கு இருப்பதில்லை. உள்ளுக்குள் கோபமும் வெறுப்பும் பொங்கிக் கொண்டிருந்தாலும் வெளியே புன்னகையை போர்த்திக்கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மாறுவேடம் கோரும். வெளியே இருந்து பார்க்கும்போது ராஜ வாழ்க்கையாகத் தோன்றும். அனுபவித்துப் பார்த்தால் நரக வாழ்க்கை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sQfiLHN
via IFTTT