திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக நடைபெற்றுவரும் ஆடிக் கிருத்திகை திருவிழாவில், நேற்று நடைபெற்ற ஆடி பரணி விழாவில் காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமிகோயிலில், நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை திருவிழா ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது. ஆடி பரணி விழாவை முன்னிட்டு,நேற்று அதிகாலை சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RHbULFw
via IFTTT