கோவை: கோவையில் பிரசித்திப்பெற்ற வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாட்டனர்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8sVYZWB
via IFTTT