89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில், ‘குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை’ என்ற மிகவும் வித்தியாசமான சடங்கு நடைபெறுகிறது. இதுபோன்ற நேர்த்திக்கடனை வேறு எந்த கோயிலிலும் காண முடியாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையில் கொல்லங்கோட்டில் குடிகொண்டுள்ள பத்ரகாளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். குழந்தை இல்லாத தம்பதியினர் இக்கோயிலில் ‘தூக்க நேர்ச்சை’ நடத்திக் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். பின்னர் குழந்தைகள் பிறந்ததும் தூக்க நேர்ச்சையை நிறைவேற்றுகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் இக்கோயிலில் மீன பரணி திருவிழா நடைபெறுகிறது. இதன் 9-வது நாளில் ‘தூக்க நேர்ச்சை’ நடைபெறும். இதில் தமிழக, கேரள பக்தர்கள் குவிகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/58X0fsT
via IFTTT