89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “செல்வந்தனாக இருப்பது வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை தராது” - பில் கேட்ஸ்

“செல்வந்தனாக இருப்பது வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை தராது” - பில் கேட்ஸ்

வாஷிங்டன்: 2022-க்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் அனைவரும் தங்களது சிறப்பு பகிர்வுகள் மூலம் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பில் கேட்ஸ், வாழ்வின் நிறைவு குறித்து தனது வலைப்பதிவில் பேசியுள்ளார். அதில் அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால், உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KuMZVeo
via IFTTT