89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தஞ்சாவூர் | ஆதரவற்ற மாணவர்களுக்கு 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி

தஞ்சாவூர் | ஆதரவற்ற மாணவர்களுக்கு 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆதரவற்ற மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கினார் வாழை விவசாயி எம்.மதியழகன்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நாளை, மற்றும் நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், சமூக நலத்துறை சார்பில் நடைபெறவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8NOlXwi
via IFTTT