89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மழைக்கால கார் பராமரிப்பும் பாதுகாப்பும் - ஒரு பார்வை

மழைக்கால கார் பராமரிப்பும் பாதுகாப்பும் - ஒரு பார்வை

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்த காலகட்டத்தில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமம். அதேசமயம் வாகனங்களை உரிய அளவில் பராமரித்து வைத்திருப்பதும் அவசியம். மழைக் காலங்களில் திறமை மிகு வாகன ஓட்டிகளுக்குக் கூட வாகனங்களை ஓட்டுவது மிகவும் சவாலான விஷயமே. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் சாலைகளில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

குரூயிஸ் கன்ட்ரோல்: சாலையில் உள்ள அறிவிப்புப் பலகைகள் சரிவர தெரியாமல் போவதும் வாகன ஓட்டிகளின் கணிப்புகளைப் பொய்யாக்கி விபத்துக்கு வித்திடுகிறது. இதனால் மழைக் காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் குரூயிஸ் கன்ட்ரோல் எனும் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குரூயிஸ் கன்ட்ரோல் முறையை தேர்வு செய்வதால் வாகனங்கள் வேகமாக செல்லும். இதுவும் விபத்துகளுக்குக் காரணமாகிறது. விபத்து நடப்பதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதைத் தவிர்த்துவிடலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Thd9BDX
via IFTTT