89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் உண்டியல் காணிக்கை ரூ.122 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் உண்டியல் காணிக்கை ரூ.122 கோடி

திருமலை: திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கலந்துக்கொண்டு பக்தர்கள் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீண்டும் சர்வ தரிசன டோக்கன்கள் திருப்பதியில் கடந்த 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் தினமும் 25 ஆயிரம் டோக்கன்களும், மற்ற வார நாட்களில் தினமும் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் அன்றே சுவாமியை குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்கலாம். டோக்கன் பெறாத பக்தர்களும் நேரடியாக திருமலைக்கு சென்று, வைகுண்டம்-2 காம்ப்ளக்ஸ் வழியாக சென்று இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்கலாம். வரும் 8-ம் தேதி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் நடை அடைக்கப்படும். ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நவம்பர் 5-ம் தேதி ஜெர்மனியிலும், பாரீஸில் நவம்பர் 6-ம் தேதி முதலும், லண்டனில் நவம்பர் 16-ம் தேதியும், ஸ்காட்லாந்தில் நவம்பர் 13-ம் தேதியும் நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qgkvEVT
via IFTTT