89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குழந்தை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோர் | குழந்தைகள் தினம் சிறப்பு பகிர்வு

குழந்தை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோர் | குழந்தைகள் தினம் சிறப்பு பகிர்வு

சென்னை: பரபரப்பான வாழ்வியல் சூழலுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொண்ட பெற்றோர், பிஞ்சுக் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது வளர்ப்பில் தவறிழைப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சிறுவர் எழுத்தாளர் விழியன் கூறியதாவது: பெற்றோர் தங்களுக்கு கிடைக்காதது எல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று கருதி, அவர்களது சுதந்திரத்தை பறிக்கின்றனர். தொடர்ந்து ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபடுத்தி, அவர்களது நேரத்தை திருடுகின்றனர். குழந்தைகள் ‘சும்மா’ இருக்கும்போதுதான், பரந்த சிந்தனையும், அதை செயல்படுத்தும் திறனும் பிறக்கும். இதுதவிர, ஏதேனும் ஒரு கலையை குழந்தைகள் கற்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். மேலும், குழந்தைகளைசாதனையாளராக மாற்ற பல பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஆனால், அதற்கான அதிக பயிற்சிகளால் குழந்தைகள் அழுத்தத்துக்கு தள்ளப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Yt3AKJ
via IFTTT